அமெரிக்காவில் வாழ்கிறான் தொழிலதிபர் கலையரசன். பணம், புகழ் என்று எல்லாம் இருந்தும் ஏதோவொன்று தன்னிடம் இல்லாததைப் போல உணர்கிறான். வெறுமையில் தவிக்கிறான். பிறகு, அது என்னவென்றும் கண்டுபிடிக்கிறான். தமிழ்நாட்டில் இருக்கும் தனது முன்னாள் காதலி கயல்விழி தான் தனக்கு தேவை என்று உணர்கிறான். மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து கயல்விழியை சந்திக்கிறான். ஆனால், கயல்விழியோ அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இருப்பினும் கலையரசன் கயல்விழியின் மனதில் மீண்டும் இடம் பிடிக்க வேண்டும் என்று அலைகிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா? காதலுக்காக கடல் கடந்து வந்த அவன் கயல்விழியின் காதலை மீண்டும் பெற்றானா? இவர்களின் மேடு பள்ளமான காதல் பயணத்தை குக் கூ எப் எம் ல் கேளுங்கள்...Read More