தன் பாட்டியின் அரவணைப்பில் நண்பர்களின் அக்கறையில் வளர்கிறாள் நிலா. அவளின் பதின்ம வயதில் அவள் மீது காதல் கொண்ட சூர்யா சில சிரமங்களுக்கிடையே அவளை மணக்க, தனக்காக எதையும் செய்யத் துணியும் கணவனின் எல்லையற்ற காதலில் கரைகிறாள். அவனது குடும்ப சூழலில் அழகாய் பொருந்திப் போக, அவளை ஊக்குவித்து குடும்பத் தொழிலில் மிளிர வைக்கிறார் மாமனார். அதனால் குடும்பத்தில் நிகழும் எதிர்ப்புகள், அதை சாமர்த்தியமாக முறியடிக்கிறாள் நிலா. அவளுக்குப் பக்க பலமாக என்றும் உடன் நிற்கும் நண்பர்கள் என குடும்ப அமைப்பிற்குள் நிகழும் அழகான காதல் கதையே உன்னில் அலையாகிறேன் கண்ணா...Read More