பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, தமிழ் இலக்கிய வரலாறு - கே.எஸ்.எஸ். பிள்ளை, பெருந்தொகை ஆகிய நூல்களில் இருந்து சில ஆதாரங்கள் கிடைத்தன. மேலும் பல மூலங்கள் வாயிலாக திரட்டிய சான்றுகளைக் கொண்டு இந்த சரித்திர நாவலை எழுதத் தொடங்கினார் பார்த்தசாரதி. களப்பிரர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை மாநகரம், பாண்டிய நாட்டு மக்களின் நிலையைப் பற்றி மிகத் தெளிவாக சுட்டிக் காட்டி கதை எழுதியுள்ளார் எழுத்தாளர். இந்தக் கதையில் வரும் பல சரித்திர கதாபாத்திரங்கள் பல தமிழ் எழுத்தாளர்களின் பாராட்டைப் பெற்றுத் தருபவையாய் திகழ்ந்தன.Read More