கொடியிடையில் அசையும் இடை தான் அழகோ? அப்படியென்று சொன்னது யார்? முட்டைக் கண்களும் உப்பிய கன்னங்களும் குவிந்த இதழும் கோடுகள் கொண்ட கழுத்தும் மடிப்புகள் தழும்பிய இடையும் ஒரு பெண்ணை அழகியாக காட்ட தவறுவதில்லையே. மெய்யான காதல் வெளி தோற்றத்தை கண்டு வருவது அல்ல. உயிர் தொட்ட மெய் நேசத்தின் வெளிப்பாடு காதல்.சமுதாயத்தின் பார்வையில் தன் பருமனை குறைவாக எண்ணி குமுறும் ஒருவளை அன்பினால் கட்டி ஆளும் அவன் பாரிவேந்தன். அந்த கால பாரிவேந்தன் முல்லைக்கு தேர் கொடுத்தான் இந்த கால பாரிவேந்தன் தன்னை வெறுக்கும் மனைவி முல்லைக்கொடிக்கு தன் இதயத்தையே காலடியில் வைத்தான்..அவள் முல்லைக்கொடி பாரிவேந்தனின் இஞ்சி இடையழகி.Read More