வால்மீகி எழுதிய இராமாயணக் கதை நாம் அனைவரும் அறிந்ததே! இராமரின் ஜனனத்தில் தொடங்கும் அக்கதை இராமரின் புதல்வர்கள் அவரை வந்து சேர்வதாகவும், சீதை தனது அன்னையான பூமாதேவியை அடைவதாகவும் நிறைவடையும். ஆனால், அக்கதையில் கூறப்படாத சீதையின் பண்புகளையும், மாபெரும் ஆற்றல்களையும் பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறி சீதை புவிக்குள் செல்லவில்லை என்றும், சீதையின் மைந்தர்கள் இராமரைச் சென்றடைந்து அவருடன் சேர்ந்து வாழவில்லை என்றும் வேறு ஒரு கண்ணோட்டத்தை அளித்து மிகவும் அற்புதமான காவியமாக இந்நூலைப் படைத்திருக்கிறார், எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன்.Read More