யாரும் அறியாத, அதிகம் சான்றுகள் இல்லாத ஒரு குறிப்பிட்ட காலத்தைப் பற்றி சரித்திர நாவல் எழுதுமாறு ஒரு பத்திரிக்கை விடுத்த வேண்டுகோளை ஏற்று நித்திலவல்லி என்னும் இந்த நூலை எழுதினார் பார்த்தசாரதி. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் ஆரம்பித்து ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்ட வரலாற்றை ஒரு சரித்திர நாவலாக எழுதி நமக்கு அர்பணித்துள்ளார், எழுத்தாளர் பார்த்தசாரதி. களப்பிரர்கள் மற்றும் பாண்டியர்கள் வரலாறு இடம்பெறும் இந்த நூல் பல மறைக்கப்பட்ட சரித்திரப் பக்கங்களை நமக்கு எடுத்துக் காட்டுவதாகத் திகழ்கிறது.Read More