ரிஷிதா என்னும் கல்லூரி படிக்கும் இளம் பெண்ணும் சமர் என்னும் பணக்கார திமிர் பிடித்த வாலிபனும் தற்செயலாக கடற்கரையில் சந்தித்துக் கொள்கின்றனர். துடுக்குத் தனமும் விளையாட்டு தனமும் அதிகம் நிறைந்த ரிஷிதா, சமரை நடுத்தர வர்க்கத்து வாலிபன் என்று எண்ணி, மிகச் சாதாரணமாய் பேசி பழகுகிறாள். அவனை, ரோட்டோரம் இருக்கும் கடைகளுக்கு அழைத்துச் சென்று உணவு உண்ண வற்புறுத்துகிறாள். ரிஷிதாவின் அழகிலும் விளையாட்டிலும் மயங்கி, அவள் சொல் பேச்சு கேட்டு நடக்கிறான். சிறிது நாட்களுக்குள்ளாகவே ரிஷிதாவின் குறும்புத்தனம் அவனுக்கு வெறுப்பை உண்டாக்க, ரிஷாதாவிடம் சொல்லாமலேயே அவன் டெல்லி சென்று விடுகிறான். அங்கு சென்று தனிமையில் இருக்கும்பொழுது தான் ரிஷிதா மீது அவனுக்கு இருந்த காதலையும் நட்பையும் உணர்கிறான். மீண்டும் அவளைத் தேடி சென்னை வருகிறான். ரஷிதா குடும்ப பிரச்சனையின் பணத்திற்காக தவிக்கிறாள். சமர், அவளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்கிறான். அவளுடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறான். அவள் மனநிறைவோடு இருக்கும் ஒரு தருணத்தில், அவளிடம் சென்று தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறான். ரிஷாதாவும் அவன் மீது கொண்டிருந்த அன்பால் அவனுடைய காதலை ஏற்கிறாள்.Read More