நெட்வொர்க் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தும் ஆதிரையும் இந்தியாவின் தலைசிறந்த மருந்துக் கம்பெனியின் தலைமை ஆராய்ச்சியாளனான அவளது கணவன் அபிமன்யுவும் தங்களது திருமண நாளைக் கொண்டாட பாண்டிச்சேரி விரைகின்றனர். வழியில் ஏற்பட்ட ஒரு விபத்து ஆதிரையின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது.
இணையதளத்தின் இருட்டு மூலைகளைத் தன்னுடைய சுயலாபத்துக்காக முழுமையாகப் பயன்படுத்தத் தயங்காத ஒரு கும்பலின் கை டானாவை (Dana) நோக்கி நீளுமாயின்... மரணிப்பவர் யாரோ?
பல்லாண்டுகளாகத் துரத்திக்கொண்டிருக்கும் ஆதிரையின் கடந்தகாலம் அவளுடைய நிகழ்காலத்தைச் சந்தித்தால்..?Read More