தலைமையாசிரியர் பள்ளியில் தனது வேலையை துவங்கும் காட்சியில் தொடங்கும் இக்கதை, பள்ளி மாணவர்களின் சேஷ்டைகளுடன் நகர்கிறது. சில மாணவர்கள் திருவேங்கடம் என்னும் உலகம் அறியாத ஒன்றாம் வகுப்பு மாணவனை கேலி செய்ய, தலையாசிரியர் அவனை அந்தப் பையன்களிடம் இருந்து காக்கின்றார். பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட விழாவிற்கான ஏற்பாடுகள் பலமாய் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் விழாவில் பங்கேற்க பாடல்களையும், கவிதைகளையும் மனனம் செய்து கொண்டிருந்தார்கள். திருவேங்கடம் என்னும் சிறுவனின் பாட்டி, அச்சிறுவனின் பேரணி குறித்த ஆசையை ஆசிரியரிடம் கூறினார். ஆசிரியரும் அவனை அழகாக ஆடை அணிய வைத்து, அணியின் முன்னிறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவர்களுடன் பேரணியாய் நாட்டுப்பற்று பாடல்களைப் பாடிக்கொண்டு சென்று சேர்வதாய் கதை நிறைவடைகிறது.Read More