இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற ராஜம் கிருஷ்ணனின் இந்த நூல், மிகவும் அருமையான ஒன்று. நமது அன்றாட ஊட்டத்திற்குத் தேவையான உப்பினை உருவாக்கும் தொழிலாளர்களின் அவல வாழ்க்கை எவ்வளவு கொடியது என்ற கதைக்கருவைக் கொண்டு அமைக்கப்பட்டது இந்த சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் "இலக்கியம் என்பது பசி அடங்கிய பின் மேற்படி கொறிக்கும் சிறுதீனியாக இல்லாமல், அத்தியாவசிய உணவாக மக்களின் மனதில் இடம் பெற வேண்டும்" என்ற உயரிய சிந்தனையோடு, தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வியலை இலக்கிய நடையில் எழுதி இந்நாவலைப் படைத்துள்ளார்.Read More